பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்தென 13 கட்டை காட்டு பகுதியில் கைக்குண்டுகள் இருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய
குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு தேடுதல் மேற்கொண்ட போது k409 ரக கைக்குண்டு ஒன்றும் 82.2 பிரவுன் ரக கைக்குண்டு ஒன்றுமாக இரண்டு கைக்குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டடுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
இது சம்பந்தமாக சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படாத போதிலும்
இரண்டு கைக்குண்டுகளும் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும்
குறித்த கைக்குண்டு இரண்டும் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது இரண்டு கைக்குண்டுகளையும்
செயலிழக்கச் செய்யுமாறு புத்தள விசேட அதிரடிப் படையினருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா