ஆறாத வடுவாகி மாறாத வலி தந்து
ஒன்பது பேரின் உயிர்களை பலியெடுத்த
கோர விபத்து இடம்பெற்ற சோக கரைபடிந்த கறுப்பு தினம். 
பசறை நகரிலிருந்து எக்கிரிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் இருநூறு அடி பள்ளத்தில்
வீழ்ந்து விபத்து ஏற்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன.

உறவுகளை இழந்து தவிக்கும்
உயிர் பலியானோரின்
மூன்றாவது நினைவு நாள்.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கு
அரசாங்க தரப்பில் இலங்கை போக்குவரத்து சபையினால் இழப்பீடு தொகையாக
பத்தாயிரம் ரூபாய் மாத்திரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உடல் ஊனமுற்றோராக தற்போதும்
சிகிச்சை பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
அன்றைய நாட்களில் அனுதாப செய்திகள், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என ஆயிரம் விடயங்கள் விபத்து தொடர்பான
பேசு பொருளாகின.
அண்மைய காலங்களில்
இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்பட்டுள்ள
புதிய பேருந்துகள் குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா ???
தற்போது இப்பாதை வழியாக
நாளாந்தம் பயணிக்கின்ற பேருந்துகள் உரியவாறு சீர்சிருத்தப்பட்டுள்ளன என்பது பரிசீலிக்கப்படுகின்றதா ???
பசறை – மடுல்சீமை ஊடாக எக்கிரிய, பிட்டமாறுவ வரை செல்கின்ற பிரதான பாதையாவது சீர்திருத்தப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளதா ???
உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம் !
– நடராஜா மலர்வேந்தன்
