கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக மடுல்சிமை யில் இருந்து எக்கிரிய வரை செல்லும் வீதி மெட்டிக்காத்தன்ன 33 வது மைல் கல்லுக்கு அருகே வீதி தாழிறங்கியமையினால் அவ்விடத்தில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
எனவே அவ்விடத்தை உடன் சரி செய்து தருமாறு கூறியே அப் பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் அன்றாடம் கடமைகளுக்கு செல்ல பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் நோயாளிகளை வைத்திசாலைக்கு கொண்டு செல்வது கூட தூக்கி வேண்டியதாக உள்ளதாகவும் பஅன்றாட தேவைகளுக்கு அவ்வீதியை பயன்படுத்துபவர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறியே மக்கள் இவ் இடத்தில் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமு தனராஜா


