இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரணி இன்று உயிரிழந்துள்ளார்.
கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் இன்று மாலை 5 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நாளை (ஜனவரி 26) சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் உயிரிழக்கும் போது பவதாரணிக்கு வயது 47என்பது குறிப்பிடத்தக்கது.
