நுவரெலியா பொரலாந்த பகுதியைச் சேர்ந்த (28) வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தொலைபேசியில் WhatsApp சமூக ஊடக செயலியின் மூலம் தொடர்பை ஏற்படுத்தி போதைபொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்திலிருந்து விற்பனை செய்யப்பட்ட பின்னர் மீதமாக இருந்த 5 கிராம் 100 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் நுவரெலியாவை அண்மித்த பல பிரதேசங்களுக்கு மிக நுணுக்கமான முறையில் பல நபர்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளமையும் தனது தொலைபேசித் தரவுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தியதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
மேலும் சந்தேக நபர் மிகவும் தந்திரமான முறையில் முச்சக்கர வண்டியின் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (29) முன்னிலை படுத்தபட்ட போது போதைப்பொருள் வழங்கியவர்கள் மற்றும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு தொடர்பான தகவல்களை சேகரித்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோரின் விபரங்கள், சந்தேக நபரை விசாரணை செய்து பெறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் விசாரணை செய்யும் வரை விளக்கமறியலில் வைக்குமாரும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்
