மடுல்கலை நிருபர்
கண்டி- அணியவத்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.
தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
