கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக பணிப்பாளர் பெரியசாமி முத்துலிங்கம் எழுதியுள்ள
‘ மலையகம் நிலைமாற்றத்தினை நோக்கி ‘ நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பசறை நகர பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை சமூக அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்விற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு இலங்கை சமூக அபிவிருத்தி நிறுவனத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
ந.மலர்வேந்தன்
