‘குட் பேட் அக்லி’ டைட்டிலே தீயாய் என்பதால் “தீ” யை வாயால் பிடித்து அஜித் படத்தை வரைந்து ஓவியர் அசத்தல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்தவர் ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் அஜித்தின் புதிய படத்தின் அப்டேட்
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் போஸ்டர் வெளியிட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும், டைட்டிலே தீயாய் இருக்கு என்பதால் தீயைக் குறிக்கும் விதமாக தீ எரியும் குச்சியை வாயில் வைத்துக்கொண்டு “தீ”யை வாயால் பிடித்து நடிகர் அஜித் படத்தை ஓவியர் செல்வம் வரைந்தார்.
அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், படத்தின் அப்டேட்டிற்காக கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் தவமாய் தவம் கிடந்து வெறித்தனமாக காத்திருக்கின்றனர், இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அஜித்தின் அடுத்த படமான
‘குட் பேட் அக்லி’ அறிவிப்பு வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. இதனை தற்போது இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
அஜித்தின் 63 வது படமான ‘குட் பேட் அக்லி’ ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாகவும், மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
‘குட் பேட் அக்லி’ என பெயரிட்டுள்ள போஸ்டரில் முள்வேலி, துப்பாக்கி போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன, இதை பார்க்கையில் டைட்டிலே தீயாய் இருக்கு.. படமும் ஆக் ஷன் கலந்த தீயாய் இருக்கலாம் என்பதால்.. ஓவியர் செல்வம் அவர்கள் தீயை குறிக்கும் விதமாக குச்சியின் ஒரு பகுதியை எரிய வைத்து மற்றொரு பகுதியை வாயில் வைத்துக் கொண்டு தீ எரியும் நெருப்பு பகுதியில் நடிகர் அஜித் உருவத்தை “வாயாலேயே” “தீ”யை பிடித்து ஐந்து நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார். படம் வெற்றி அடைய வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஓவியத்தை கண்ட இளைஞர்கள் தீயாலயே அதுவும் வாயில் வைத்துக் கொண்டு அஜித் படத்தை வரைந்தது மிகச் சிறப்பு என்று ஓவியர் செல்வத்தை பாராட்டினார்கள்.
***
சு.செல்வம் ஓவியர்
மணலூர்பேட்டை
