அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்மட்ட தூதுக்குழு ஒன்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ளனர்.
ஆசிய விவகாரம் தொடர்பான திறைசேரி பிரதிப் பணிப்பாளர் ரொபர்ட் கெப்ரோன், தெற்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்பான பிரதி இராஜாங்கச் செயலாளரும், தூதுவருமான கெலி ஹிடலின் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்கியுள்ளனர். இவர்கள் நாட்டில் உயர்நிலை பிரதிநிதிகள் பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதேபோன்று அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளனர்.
இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வழங்கி பயனுள்ள முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த விஜயத்தின் போது இலங்கை மக்களின் பாதுகாப்பு, சுகாதாரத்திற்காக அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தி வருவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்க் தெரிவித்துள்ளார்.
