எமது பாடசாலையின் மாணவர்கள் செல்வி. எனிட்டா மோசஸ்,
செல்வன் வி .மிதுன்குமார் மற்றும் செல்வி.எஸ் .ஜனப்பிரியா ஆகியோரின் கிறிக்கட் கனவை நனவாக்கிய ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட கிரிக்கெட் சம்மேளன பொதுசெயலாளர் திரு.பகி பாலசந்திரன் அண்ணா அவர்களுக்கு எமது பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பாடசாலை சமூகத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதுளை மாவட்ட கிரிக்கெட் சம்மேளன பொதுசெயலாளர் அவர்கள் இன்றைய தினம் பதுளை மாவட்ட கிறிக்கட் சம்மேளனத்தின் பயிற்சி பாசறையில் மேற்குறிப்பிட்ட மூன்று மாணவர்களுடன் சரளமாக கலந்துரையாடி இலங்கை கிறிக்கட் வரலாற்றின் மகத்துவத்தை எளிய முறையில் தெளிவுபடுத்தி தனது தலைமையின் கீழ் இலவசமாக பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பளித்து இன்றைய தினம் முதல் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தந்துள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுபட போக்குவரத்து மற்றும் உணவு தொடர்பான வசதிகளும் பகி பாலசந்திரன் நற்பணி மன்றத்தினால் வழங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எம் மலையகப் பிள்ளைகளின் கனவு மெய்ப்பட வாய்ப்பளித்த அனைத்து நல்லுங்களுக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
சதாசிவம் சந்த்ரமோகன்

