லைக்கா ஞானம் அறக்கட்டளையின் கண்டி கிளையின் கீழ் 23 மார்ச் மாதம் 2024 அன்று உயர்தர கல்வியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் பிற வேலை வாய்ப்புகளுக்கான தொழில் வழிகாட்டல் ஒருநாள் பயிற்சி பட்டறை கண்டி விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி பட்டறைக்கு வளவாளராக யாழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஆலோசகர் கௌதமன் கலந்து கொண்டார்.
அதேவேளை சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தமை விசேட அம்சமாகும்.
மேலும் நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும்,அன்பளிப்புகளும் வழங்கப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் கண்டிக்களையோடு இணைந்து சேவையாற்றுவதற்காக பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட பலர் தாமாக முன் வந்துள்ளனர்.
முதல் கட்டமாக தமிழ் மொழி மூலமாக நடத்தப்பட்ட நிகழ்வின் மற்றும் ஒரு பகுதியாக சிங்கள மொழியிலான நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30) நடைபெறும்.














