நு/சென்கிளையர் தமிழ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக இருந்த நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு!
பாடசாலை வளாகத்திற்கு நீர்த் திட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்த சிக்கல்கள், பல்வேறு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தீர்க்கப்பட்டு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.நீர்வளத்திற்கும் பாடசாலைக்கும் இடையிலான தூரம்,மின்சார அலகின் கனதி ,நீர்ப் பரிசோதனை, உயரம் மற்றும் நிதி வசதிகள் போன்றன தடைகளாக இருந்தன.
அதிபரின் பெருமுயற்சியால் அருகிலுள்ள நீரேந்து பிரதேசமொன்றிலிருந்து பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் அனுசரனையுடன் நீரைப்பெறும் வசதி கிடைத்துள்ளது.
பாடசாலை சமூகம் ,பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் இணைந்து இத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றன.
பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர் ,டெவோனைச் சேர்ந்த திரு.கேதீஸ் என்பவரின் பெருங்கருணையால்ரூபா.102 000 நிதி வழங்கப் பட்டுள்ளது.ஏனைய உறுப்பினர்களின் பங்களிப்புடன் ரூபா.150 000 பெறுமதியான நீர்க்குழாய்களும் பொருத்திகளும் நீர்ப் பம்பியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.