நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் மிக புதிய வகுப்பறை கட்டடத்தை நிர்மானித்து பெருந்தொண்டாற்றிய ” அகரன் அறக்கட்டளை ‘
பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல பெருந்தோட்ட பகுதியில் அமைந்துள்ள அரச பாடசாலையாகும். முதலாந்தரம் தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை பதினொரு வகுப்புக்களை கொண்டியங்குகின்ற பாடசாலையாகும். இப்பாடசாலையில் சுமார் 400 மாணவர்களை வரை கல்வி கற்கின்றனர். இப்பாடசாலை மூன்று வகுப்பறை கட்டடங்கள் காணப்பட்டபோதும் இடவசதி பற்றாக்குறை காரணமாக
ஆண்டுதோறும் ஒரு வகுப்பு மாணவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர குடிலிலும் பிங்கராவ தோட்ட ஆலய மண்டபத்திலும் கல்வி கற்று வந்தனர். மழை காலங்களில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இவ்வாறான வளக்குறைப்பாடுகளுக்கு மத்தியில்
இப்பாடசாலையின் பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினால் மாணவர்கள்
கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சிறந்து விளங்குவதும் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் உயர்வடைந்து க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு செல்கின்ற மாணவர் விகிதம் உயர்வடைந்திருப்பதும்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பாராட்டுக்குரியது.
கடந்த காலங்களில் மின்சார வசதி முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய இராஜாங்க கல்வி அமைச்சருமாகிய அருணாசலம் அரவிந்தகுமார் பெற்றுக்கொடுத்தமையும் முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் நிதியொதிக்கீட்டில் கட்டட சீர்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மிக நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாத குறைப்பாடு தற்போது அகரன் அறக்கட்டளையால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அகரன் அறக்கட்டளையின் அருங்கொடையால் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டட ” அகரன் மண்டபம் ” திறப்புவிழா கடந்த சனிக்கிழமை (04.05.2024 ) சனிக்கிழமை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர்
எம். பாரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகரன் அறக்கட்டளை ஸ்தாபகர் தலைவர் பி.ஜோதி, சிறப்பு அதிதிகளாக அறக்கட்டளையின்
உப தலைவர் வை.ரஞ்சித்,
செயலாளர் ரி.முரளிதரன்,
உப செயலாளர்
ஆர். விஸ்வநாதன், பொருளாளர் எஸ்.சிவக்குமார், உப பொருளாளர் ஜே.தசதரன் உள்ளிட்டோரும் ஏனைய அகரன் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்களும் ஆகியோரும், எல்ல கோட்ட கல்வி காரியாலய ஆசிரிய ஆலோசகர் எஸ். அமிர்தலிங்கம் ஆகியோரும், ஆதியோகி யோகாரண்யம் அமைப்பின் ஸ்தாபகர் சண்முகம் தனசேகரன் குருஜீ, தலைவர் வீ. ஏகாம்பரம் செயலாளர் சங்கர் சுரேஷ் ஆகியோரும் பாடசாலை சமூகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.
( நடராஜா மலர்வேந்தன் )









