நோட்டன் தியகல பகுதியில் உள்ள நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் பயணித்த வேன் ஒன்று கிரிவன்நெலிய பகுதியில் உள்ள மடத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதால் அதன் சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கிறிவான்நெலிய மடத்திற்கு குறித்த வேன் பக்தர்கள் குழுவொன்றை அழைத்து வந்ததாகவும், அவர்களை விட்டு விட்டு மீண்டும் சாரதி வேனை எடுத்துச் செல்லும் போது மடத்திற்கு அருகில் உள்ள குன்றின் மீது மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.05.05.2024.
