பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற 17 வயது சிறுவன், உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 4 ஆம் திகதிஇடம்பெற்றுள்ளது.
மரதன் ஓட்டப்போட்டியில் குறித்த சிறுவன் பங்கேற்ற பின் வீட்டிற்குத் திரும்பிய நிலையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துள்ளார்.
சிறுவனை குருணாகல் போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்த நிலையில், பரிசோதனையில் மாரடைப்பு காரணமாகச் சிறுவன் உயிரிழந்ததாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.