மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கான வீசா விண்ணப்பப் பணியின் போது இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடலும் இடம்பெற்றது.
எனினும், அங்கு சென்ற இருவர் எதிர்பாராத அனுபவத்தை சந்திக்க நேரிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தூதரகத்தால் அவர்களது விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.