ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை வழிகாட்டலில் ஊவா மாகாண கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் நடுப்பகுதியில் பதுளையில் இடம்பெறவுள்ளது.
இதன் ஓர் அங்கமாக நடத்தப்படவுள்ள ஆய்வரங்கம் ” சமூக மாற்றத்திற்கான கலை, இலக்கிய, கலாசார மற்றும் தொழிற்சங்க முயற்சிகள்: நேற்று : இன்று: நாளை” என்ற தலைப்பில் ஊவா மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது.
ஆய்வரங்கத்தை ஊவா மாகாண கலாசார அமைச்சு, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் என்பன இணைந்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆய்வரங்கக் கருப்பொருளுடன் தொடர்பான விடயங்களை முன்னிறுத்தியதான ஆய்வு கட்டுரைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர் கலாசாலை மற்றும் கல்வியில் கல்லூரி விரிவுரையாளர்கள், சுயாதீன ஆள்வார்கள், பட்டப்படிப்பிற்காக குறித்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்ட பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆய்வில் ஆர்வமுடையவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
முழுமையான ஆய்வுக் கட்டுரைகளை tamilsahi2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆய்வரங்க ஏற்பட்டுக் குழு கேட்டுக்கொள்கின்றது. ஆய்வரங்கம் தொடர்பான மேலதிக விபரங்களை 0771898978 என்ற கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
ஏற்பாட்டுக் குழு
ஆய்வரங்கம்
ஊவா மாகாண தமிழ் சாகித்ய விழா 2024