இரத்தினபுரி ஹேயஸ் தோட்டத்தில் ஓய்வு பெற்ற தோட்ட தொழிலாளர் ஒருவர் மீது அதே தோட்டத்தில் பிரதி முகாமையாளர் தாக்குதல் (17) நடத்தியுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான வயோதிபர் தற்போது கொலன்ன பிரதேச வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இரத்தினபுரி ஹெயஸ் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ராஜலிங்கம் என்ற தொழிலளாரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளியின் மகள் மகன் மற்றும் பிரதேச மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்த தாக்குதல் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள் கூறுகையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இரத்தினபுரி மாவட்த்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இந்த தாக்குதல் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளிக்கு நீதி கிடைக்க வேண்டும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை வழங்கவேண்டும் தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்கும் சம்பவங்கள் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல்லா விட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்பாட்டங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
M.F.M.Ali
