மத்திய மலை நாட்டில் குடும்ப வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக செல்பவர்கள் பிரதேச செயலகத்தில் சிபாரிசு கடிதம் பெற்று செல்வது வழக்கம்.
அவ்வாறு கடிதம் பெறுவதற்கு பிரதேச செயலகத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் அங்குள்ள அதிகாரி ஒருவர் கையூட்டல் (பத்தாயிரம் ரூபாய்) தருமாறு கேட்டு அதனை வழங்க மறுப்பு தெரிவித்ததால் கடந்த இரண்டு மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் மேலும் கூறுகையில்
குடும்பத்தில் பாரிய பொருளாதார பிரச்சினை எனக்கு மூன்று பிள்ளைகள் தோட்டத்தில் போதிய வருமானம் இல்லாமல் வெளிநாடு சென்று எனது குடும்ப வறுமையை ஈடுசெய்யும் நோக்கில் முகவர் ஒருவர் மூலம் வெளிநாடு செல்ல சகல ஏற்பாடுகளும் செய்து முடித்து இறுதியில் பிரதேச செயலகத்தின் கடிதம் பெற வேண்டிய நிலையில் கடந்த மாதம் முதல் அழைந்து வருகிறேன் .
அங்குள்ள அதிகாரி ஒருவர் பத்தாயிரம் ரூபாய் கேட்டு கடந்த ஒரு மாதமாக என்னை இழுத்தடிப்பு செய்து வருகிறார் இதனால் எனக்கு வெளிநாடு செல்ல முடியாதுள்ளது இவ்வாறான அதிகாரிகளின் இந்த செயலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய மலை நாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு உப பிரதேச செயலகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர்.
