உலகளவில் ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்று வரும் சர்வதேச ஈரநில பூங்கா மாநாட்டில் கலந்து கொண்ட 15 நாடுகளைச் சேர்ந்த ஈரநில பூங்கா பிரதிநிதிகள் இதனை கடுமையாகச் சுட்டிக்காட்டினர்.
மாநாட்டின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்று காலை மாநாட்டில் பேசிய ஈரநிலப் பூங்கா பிரதிநிதிகள், உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுற்றாடல் ஆர்வலர்கள் நேற்று இரவு பத்தரமுல்லை தியசரு பூங்காவில் விலங்குகள் சுற்றித்திரிவதை அவதானிக்க சென்றனர். தியசரு பூங்கா 2014 இல் பல்லுயிர் ஆய்வு பூங்காவாக உருவாக்கப்பட்டது. இங்கு தொண்ணூறுக்கும் மேற்பட்ட ஈர நிலப் பறவைகள் உள்ளன, சுமார் ஐம்பது புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு உள்ளன. இங்கு அழிந்து வரும் 05 நகர்ப்புற சிறுத்தைகள், 15 உள்ளூர் மீன் இனங்கள் மற்றும் 40 வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன.
ஈரநில மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு ஈரநில பூங்கா பிரதிநிதிகளும் இன்று காலை பூங்காவில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இங்கு உரையாற்றிய பல வெளிநாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் ஈரநிலங்களை சுற்றுலாவுக்குப் பயன்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
