வத்தளை அருண் விளையாட்டு கழகம் அருண்மாணிக்கவாசகம் பாடசாலையில் கல்விப்பயலும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் ஒழுங்கு செய்த மென் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த 16 .06 2024 அன்று தந்தையர் தினத்தை சிறப்பிக்குமாகமாக வெலிசர நவலோக்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
குறித்த கிரிக்கெட் போட்டிக்கு பிரதம அதிதியாக கொ .விவேகானந்தா தேசிய கல்லூரியின் அதிபர் மூக்கப் பிள்ளை மூவேந்தன் கலந்துகொண்டதோடு ,கௌரவ அதிதிகளாக அருண் பிரசாத் அறக்கட்டளையின் பிரதானி மா .பிரபாகரனும் சிறப்பு அதிதிகளாக அருண்மாணிக்கவாசகம் படசாலையின் பிரதி அதிபர் இரா.செல்வகுமார் அவர்களும் பாடசாலையின் இணைப்பாளர் ஸ்டாலின் ரஞ்சித் அவர்களும் செயட்திட்ட முகாமையாளர் எஸ் .சண்முகபிரபாவும் கலந்து சிறப்பித்தனர்.
லீக் போட்டிகளாக இடம்பெற்ற குறித்த போட்டியில் மொத்தமாக 06அணிகள் பங்குப்பற்றியிருந்தன.போட்டியில் முதலாமிடத்தை Rap Star Unity அணியும் ,இரண்டாம் இடத்தை Arun Super அணியும் ,மூன்றாம் இடத்தை Kings Ever அணியும் பெற்றதோடு தொடர்ச்சியாக போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய Mancik Kings ,Hunupitya Worries மற்றும் Sun XI அணிகளும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
போட்டிக்கான இணைய ஊடக அனுசரணையை மலையகம்.lk வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.















