மலையகப் புகையிரதத்தின் கலபடை மற்றும் இங்குரு ஓயா நிலையங்களுக்கு இடையிலான புகையிரதப் பாதையில் (23) காலை பாரிய மரமொன்று வீழ்ந்தமையினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரயில் தண்டவாளத்தில் விழுந்த மரம் என்பதால், அதை வெட்டி அகற்ற அதிக நேரம் எடுக்கும் என்றும், அதற்கு தேவையான பணிகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை கூறுகிறது.
இதன் காரணமாக உடரட்ட புகையிரதத்தில் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இயங்கும் புகையிரதங்கள் தாமதமாகச் செல்ல வேண்டியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்.
