இலங்கை யோகா கூட்டமைப்பு ஏற்பாடு செய்து நடாத்திய கொழும்பு முதலாவது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (30.06.2024 ) கொழும்பு புதுசெட்டித்தெரு ஸ்ரீராம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலய அறநெறி பாடசாலை மாணவன் கணேஷன் வகீஷன் முதலாமிடத்தைப்பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர் கொஸ்லாந்தையைச் சேர்ந்த திரு.திருமதி கணேஷன் – சுதர்ஷனி தம்பதிகளின் மகன் ஆவார்.
வரலாற்றில் முதற்தடவையாக சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியொன்றில் முதலாமிடத்தை வென்ற மாணவன் கணேஷன் வகீஷனுக்கும் இவரை நெறிப்படுத்தி பயிற்சியளித்தசிவ விஷ்ணு பீட ஆசிரியர் வி.யோகசந்திரன், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் யசோபிரசாத், செல்வி.ரக்ஷனா ஆகியோரையும் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலய அறங்காவலர் சபையினர், இந்து இளைஞர் மன்ற நிர்வாக சபையினர் மற்றும் யோகா பயிற்சியாசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்

