கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கதிர்காம ஆலய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் பல பதிவாகியுள்ளன.
அதேவேளை நேற்று (12) பல்கலைக்கழக மாணவியொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
