மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 1700 ரூபா போதாது, அவர்களுக்கு 2 ஆயிரத்து 250 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மஸ்கெலியா டி . எம்.டி மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து பேசுகையில் தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான சட்ட மூலமே நாடாளுமன்றத்துக்கு அவசரமாக கொண்டுவரப்பட வேண்டும். அதனை செய்யாமல் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி முற் படுகின்றார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்க படுவார்கள் என்றார்.
நாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று 48 மணி நேரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய அரசு அமைக்க நாட்டில் வடக்கு,கிழக்கு, தெற்கு,மேற்கு, மலையகம் என பிரிக்காமல் படித்த இளைஞர்களை ஒன்று இணைத்து மக்கள் அரசு ஒன்றை நிறுவி அதில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்கள்,பேகர் என பிரிக்காமல் நாம் இலங்கையர்கள் என மாற்றுவோம் என்று கூறினார்.
குறித்த வைபவத்தில் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சுரவீர கண்டி மாவட்ட அமைப்பாளர் சிவப்பிரகாசம் மற்றும் மத்திய உருப்பினர் கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் கள்.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தலைவர்கள் வர்த்தகர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
