கம்பலையில் இருந்து டயகமை நோக்கிச் சென்ற அரிசி ஏற்றிச் சென்ற லொரி விபத்து: இருவர் காயம்
கம்பலையிலிருந்து டயகமை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொரி ஒன்று மன்ராசி நகருக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் லொரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்றிரவு( 11) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கிரபத்தனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
