நேற்று (22 திங்கட்கிழமை) பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு தெற்கு பயாகலை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 தொடக்கம் 70 வயதுடையவர் எனவும் 05 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பைகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
