எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 18 ம் திகதி இந்திய கடலோர காவல் படையினரால் கைது கைது செய்யப்பட்ட 7 இலங்கை மீனவர்களை இராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மீனவர்களின் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது குறித்த 7 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசு கோரியதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
