இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவரொருவர் உயிரிழந்துள்ளார்.இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2,000 இற்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்றிரவு கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்தனர்.
அவ்வேளையில், இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைக்கு திருப்பினர்.
இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் துரத்திச் சென்ற போது விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியதில் படகு நடுகடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார்.
மேலும், விசைப்படகில் பயணித்த ஒருவர் மாயமானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
