இன்று மாலை 5 .30 மணி அளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 6 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் இடம் பெற்றுள்ளது.
ராணி தோட்ட பிரிவில் உள்ள தேயிலை மலை பகுதியில் உள்ள கருங்கல் அடி பகுதியில் உள்ள ஆலயத்தில் அத் தோட்ட மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த வேலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர்களில் 17 வயது உடைய எஸ்.விதூஷன்,8 வயது உடைய என்.கிஷாந்தன்,40 வயது உடைய எம்.மாரியம்மாள்,9 வயது உடைய எஸ்.கவிஸ்,42 வயது உடைய டி.சரவணண்,64 வயது உடைய எஸ்.பரமசிவம் ஆகியோரே வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
