தலவாக்கலையில் அமைந்துள்ள இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட வைபவமொன்று அதன் வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
நூற்றாண்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதற்காக நிறுவப்பட்ட நூற்றாண்டு விழா செயலகத்தின் செயல்பாடுகளைத் திறந்து வைத்தல் மற்றும் நூற்றாண்டு விழாவின் உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் கருப்பொருள் வெளியீட்டு விழா இங்கு நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவுடன் இணைந்து, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகத்தின் யூடியூப் சேனலின் உத்தியோகபூர்வ வெளியீடு, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை தேயிலை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், உற்பத்தியாளர்கள் உட்பட அனைத்து தேயிலை தொழில் பங்குதாரர்களுக்கும் திறம்பட விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் தகவல்களை திறம்பட பயன்படுத்துவதற்கான இடங்களை உருவாக்குதல் மற்றும் அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.
இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. பி. ரணதுங்க, பிரதிப் பணிப்பாளர் கலாநிதி கே. ரவீந்திரநாத், தாவர நோயியல் துறைத் தலைவர் டாக்டர் கங்கா சின்னையா, தாவர உடலியல் துறை டாக்டர் சேனல் தமயந்தி, உயிர் வேதியியல் துறை டாக்டர் ஆர். கே. ஏ. அமலி, பெருந்தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட முகாமையாளர்கள், தோட்டப் பிரதிநிதிகள், தோட்ட முகாமையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்கள், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
