நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் நடைபெற்றது.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பாக இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் திரு.மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றத்துடன். அனர்த்த முகாமைத்துவ குழுவில் இணைக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்த அபாய வளையங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும், கந்தபளை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீள குடியேற்றுவதற்கான ஒரு முறையான வழிமுறை தேவை என இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதற்கு தேவையான ஆதரவினை வழங்குவதற்கு நுவரெலியா அபிவிருத்தி குழு இணைத்தலைவர் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர்.
