தோட்டப்புற பாடசாலைகளுக்கான ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமை தொடர்பில்,
இலங்கை மலையக இந்திய வம்சாவழி தமிழ் புத்திஜீவிகள் மற்றும் இலங்கை மலையக இந்திய தமிழ் வம்சாவழி விண்ணப்பதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினை நாடியுள்ளனர்.
தோட்டப்புற பாடசாலை களுக்கான ஆசிரிய உதவியாளர் நியமன ஆட்சேர்ப்பிற்கான போட்டிப்பரீட்சை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையால் , தன் தொழிலிலிருந்து விலகி அல்லது தன் தொழிலின் வருமானம் மூலம் போட்டிப்பரீட்சைக்கு முகம் கொடுக்க தயாரான மற்றும் விண்ணப்பித்த 15,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் பாதிப்படைந்துள்ளதோடு அவர்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த போட்டிப்பரீட்சை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய் யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
