கொலன்னாவை நகரசபை வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தகவல் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டான் பிரசாரத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இரண்டு பேருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
