வி.தீபன்ராஜ்
கொட்டகலை மைதானத்தை சீரமைத்து தருமாறு பிரதேச இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
கொட்டகலை பிரதேச சபைக்குற்பட்ட கொட்டகலை வூட்டன் மைதானமானது கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச இளைஞர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்..
இலங்கை மலையகத்தில் கிரிக்கெட் துறையில் பல பிரச்சினைகள் உருவாகி கொண்டிருக்கும் நேரத்தில் கொட்டகலை பிரதேசத்திலிருந்து ஒருவரைக்கூட இனங்கான முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுகின்றது.
கொட்டகலைப் பிரதேசத்தில் இப்படியான ஒரு பெரிய மைதானம் காணப்படுகின்ற போதிலும் அது சரியான முறையில் பராமரிப்பின்றி காணப்படுவதாக இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மலசலக்கூட வசதி, உடை மாற்றுவதற்கான வசதி, மின் விளக்குகள் மற்றும் குடிநீர் போன்ற வசதிகள் இன்மையாலும் மைதானத்திற்கு சரியான நுழைவாயில் இன்மையால் கட்டாற்கலி நாய்கள் மற்றும் விலங்குகள் எச்சங்கள் செய்வாதல் விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்
கொட்டகலை பிரதேச சபை நிர்வாகமும் அதை சரியான முறையில் பராமரிக்கவில்லையெனவும் வெளிப்பிரதேசத்திலிருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்கள் ஒருநாளைக்கு 5000/= ரூபாய் 2500/= ரூபாய் வீதமாக மைதானத்தை முன்பதிவு செய்து விளையாடுகின்ற போதிலும் சரியான முறையில் ஏன் பாராமரிக்கப்படவில்லையென விளையாடுவதற்கு வரும் இளைஞர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த மைதானத்தை அண்மித்து காணப்படும் பாடசாலைகளும் இல்ல விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற போதும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்திருந்ததை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை பெண் மாணவிகளும் பல விளையாட்டுக்களில் பயிற்சியில் ஈடுபடுவதற்கு மைதானத்திற்கு வந்து உடைகள் மாற்றுவதற்கு அறை ஒன்றும் இல்லாததினால் பெண் வீரர்களும் பிரச்சினைகளுக்க முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே தற்போது கொட்டகலை பிரதேச சபைக்க ஆட்சிக்க வந்திருக்கும் அதிகாரிகள் இந்த மைதானத்தை வெகு விரைவாக புணர்நிர்மானம் செய்து தருமாறு விளையாட்டு வீரர்களும் பிரதேச இளைஞர் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Ok
