தூங்கிக்கொண்டிருந்த கணவனை மனைவி கோடாரியால் தாக்கிய சம்பவம் ஒன்று மொனராகலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நான்கு குழந்தைகளின் தந்தையான நபர் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் குறித்த சம்பவம், 23 அன்று காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனது கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த கணவன் சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபரான நாற்பது வயதுடைய பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
