அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினால் நேற்று 26 நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் காலை 11 மணிக்கு தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் கிட்னன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி சபைகளின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தோட்ட தலைவர் ,தலைவிமார்கள் ,இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி அரசு பெற்றுக் கொடுக்கும்.,அத்தோடு இந்நாட்டில் தலை தூக்கி உள்ள போதைப்பொருளை முற்றிலுமாக தடை செய்வோம் போன்ற முக்கிய விடயங்களை சுட்டி காட்டி கருத்துக்களை தெரிவித்தனர்.
கஜரூபன் திவ்யா நுவரெலியா
