கேகாலை எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீஓயா தோட்டத்தைச் சேர்ந்த 44 வயதான இராஜேந்திரன் நேற்று முதல் காணாமல் போயிருந்தார்.
இவரை பிரதேச மக்கள் தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று (12.11.2025) காலை 11 மணியளவில் வீஓயா ஆற்றில் ஒரு சடலம் மிதப்பதை தோட்டத்தினர் கவனித்து, உடனடியாக எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், மிதந்த சடலம் காணாமல் போன இராஜேந்திரனுடையது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் எட்டியாந்தோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
