நாவலப்பிட்டி ராக்சாவ தோட்ட விவகாரம் – பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கும் தோட்ட நிர்வாகம்.
நாவலபிட்டி தொலஸ்பாக பகுதியில் உள்ள ராக்சாவ தோட்ட ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்ட நிர்வாகத்தைக் குறித்து அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திட்டமிட்டு புனையப்பட்டவை என தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி நிலவிய சீரற்ற காலநிலையின் போது இத்தோட்டத்தில் எவ்வித மண்சரிவு அபாயமும் ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும்,தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், வீட்டுத் தளபாடங்கள், உடைகள் மற்றும் மாணவர்களுக்கான உபகரணங்கள் என அடுத்த 5-6 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன எனவும் தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது ,இதற்கான ஆதாரங்கள் நிர்வாகத்தின் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளிலும், பதிவேடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கின்றனர்.
மேலும் நிர்வாகத்திற்கு எதிராகக் காட்டப்படும் சேதமடைந்த வீடுகள் ஏற்கனவே கைவிடப்பட்ட பழைய வீடுகளாகும். பேட்டி அளித்த நபர்களுக்கு ஏற்கனவே முறையான வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இத்தோட்டத்தில் முறையாக வேலை செய்யாத ஒரு சில நபர்கள், பேரிடரை ஒரு காரணமாகக் காட்டி தனிப்பட்ட காணி உரிமைகளைப் பெறும் நோக்கில் இத்தகைய பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், அங்கு 34 குடும்பங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் 29 குடும்பங்களே உள்ளதாகவும், அதில் 14 பேர் மட்டுமே தோட்டத்தில் பணிபுரிவதாகவும் தரவுகள் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் .
“இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை எவரும் நேரடியாக வந்து பார்வையிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என தோட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தோட்ட நிர்வாகத்தால் குற்றம் சாட்டப்படும் தோட்ட மக்களால் வழங்கப்பட்ட malayagam.lk க்கு காணொளி இணைக்கப்பட்டுள்ளது.-https://www.facebook.com/share/v/1FRR2bnEte/


