கட்டிட சேதங்களுக்கான இழப்பீடு: அனர்த்தத்தினால் சேதமடைந்த நிரந்தர வர்த்தக கட்டிடங்களை மீளமைக்க மதிப்பீடு செய்யப்படாமல் 500,000/- ரூபா வரை இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இது இரண்டு கட்டங்களாக (முதலில் 300,000/- மற்றும் பின்னர் 200,000/-) வழங்கப்படும்.
மதிப்பீட்டிற்கு பின்னரான இழப்பீடு: முறையான சேத மதிப்பீட்டிற்கு பின்னர் அதிகபட்சமாக 5,000,000/- ரூபா வரை இழப்பீடு பெற முடியும்.
வர்த்தக வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் கொடுப்பனவுகள்:
கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட குறு மற்றும் சிறு வர்த்தகங்களுக்கு: 200,000/- ரூபா.
பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகங்களுக்கு: 200,000/- ரூபா.
பதிவு செய்யப்படாத வீட்டுத் தொழில் மற்றும் நிரந்தர கட்டிடங்களில் இயங்கும் வர்த்தகங்களுக்கு: 50,000/- ரூபா.
நிரந்தரமற்ற அல்லது தற்காலிக/நடமாடும் வர்த்தகங்களுக்கு: 25,000/- ரூபா.
முக்கிய தகவல்கள்:
இந்த இழப்பீட்டுத் திட்டம் 2025 நவம்பர் 21 முதல் டிசம்பர் 31 வரை நிலவிய அனர்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட இடத்தின் புகைப்படங்கள் (04 பிரதிகள்), வர்த்தக பதிவு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
