Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 10 கிலோவுக்கு 6 கிலோ கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்-கொட்டகலை யதன்பிரிவு தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
Breaking

10 கிலோவுக்கு 6 கிலோ கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்-கொட்டகலை யதன்பிரிவு தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

ThanaBy ThanaMarch 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின் டிரேட்டன் சந்தியில் நேற்று (03) மாலை 5.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

“10 கிலோ கொழுந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில்லை”, “ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்”, “10 கிலோவுக்கு 6 கிலோ கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்”, “வேலை நேரம் முறையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு, “உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்” என அவர்கள் முழக்கமிட்டனர்.

இது குறித்துத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:

“அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து நியாயம் கேட்டால், நாம் சத்தமிட்டுப் பேசுவதாகக் கூறி நிர்வாகம் எமது வேலையை நிறுத்துகிறது. தொழிலாளர்களுக்குரிய எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. இதுவரை குளவி கொட்டுக்கு இலக்காகி இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையிலும், தொழிலாளர்கள் சுகயீனமுற்றால் வாகன வசதிகளோ அல்லது வேறு அவசரத் தேவைகளோ நிர்வாகத்தால் செய்து தரப்படுவதில்லை. சம்பளம் உரிய நேரத்திற்கு வழங்கப்படுவதில்லை; நாம் அடிமைகளாகவே நடத்தப்படுகிறோம்” எனத் தெரிவித்தனர்.

 

தமது உரிமைகளைப் புறக்கணிக்கும் தற்போதைய தோட்ட நிர்வாகத்தை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026
    Editors Picks

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.