நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார் அமைச்சர் குமார ஜயகொடி!
கொழும்பு: இலங்கையில் சாதாரண நுகர்வின் அடிப்படையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமைச்சரின் கூற்றுப்படி, பல்வேறு வகையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ள காலப்பகுதி பின்வருமாறு:
92 ரக பெற்றோல்: ஏப்ரல் 23 ஆம் திகதி வரை
95 ரக பெற்றோல்: மே 10 ஆம் திகதி வரை
டீசல்: ஏப்ரல் 12 ஆம் திகதி வரை
சுப்பர் டீசல்: மே 10 ஆம் திகதி வரை
எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான இறக்குமதி நடவடிக்கைகள் முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.
