Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

May 25, 2026

வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

May 25, 2026

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!

May 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கெஹெலியவுக்கு 75 மில்லியன் அபராதம்: மருந்து கொள்வனவு ஊழல் வழக்கில் உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு!
Breaking

கெஹெலியவுக்கு 75 மில்லியன் அபராதம்: மருந்து கொள்வனவு ஊழல் வழக்கில் உயர்நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு!

ThanaBy ThanaMarch 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

    May 25, 2026

    வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

    May 25, 2026

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!

    May 25, 2026

    பண்டாரவளையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது!

    May 24, 2026
    Editors Picks

    “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

    May 25, 2026

    வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

    May 25, 2026

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!

    May 25, 2026

    சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் அதிரடியாக கைது.

    May 25, 2026

    “சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் 2026 மற்றும் 2027 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான செயலமர்வு

    May 25, 2026

    வித்யா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளி சிறைக்குள் சடலமாக மீட்பு!

    May 25, 2026

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அதிரடி கைது!

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.