Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 2019 SLPS அதிபர் நியமனப் போராட்டம் தீவிரம்: ஜனாதிபதிக்கு 100க்கும் மேற்பட்ட மகஜர்கள் தபாலில் அனுப்பி வைப்பு!
Breaking

2019 SLPS அதிபர் நியமனப் போராட்டம் தீவிரம்: ஜனாதிபதிக்கு 100க்கும் மேற்பட்ட மகஜர்கள் தபாலில் அனுப்பி வைப்பு!

ThanaBy ThanaMarch 31, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை (SLPS) நியமனங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டு, நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் ஆசிரியர்கள், தமக்கான நீதியைக் கோரி போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளனர். அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புப் போக்குகளுக்கு மத்தியில், இன்று நாடு முழுவதிலுமிருந்து ஜனாதிபதிக்கு 100க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும், அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களால் இவர்களுக்கான நியமனங்கள் பல கட்டங்களாகத் தாமதப்படுத்தப்பட்டு வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், நிர்வாக ரீதியான தீர்வை விரைவுபடுத்தக் கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்த பாரிய தபால் வழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் கையொப்பத்துடன் கூடிய இந்த மகஜர்கள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தகுதியிருந்தும் நியமனம் மறுக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பாதிப்புகளையும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த போராட்டக் குழுவினர்,

“பல வருடங்களாக நிலவி வரும் இந்த இழுத்தடிப்புக்கு ஜனாதிபதி அவர்கள் நேரடியாகத் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமனங்களை வழங்கி, கல்வித் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப முன்வர வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, ஜனாதிபதியின் துரித தீர்வை எதிர்பார்த்து இந்த ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.