தித்வா புயல் பாதிப்பு: மலையக மக்களுக்கு ரூ. 50 இலட்சம் பெறுமதியான வீடுகளும் காணிகளும் வழங்கப்படும்!
கொழும்பு: தித்வா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு 50 இலட்சம் ரூபாவிற்கும் குறையாத பெறுமதியைக் கொண்ட வீடுகள் மற்றும் காணிகள் வழங்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி உறுதியளித்துள்ளார்.
மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் (Civil Society Coalition for Hill Country Reconstruction) பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் எனத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய முறையில் காணி உரிமத்துடன் கூடிய வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யப்போவதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை, மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் அங்கத்தவர்கள் பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, மலையக மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் மற்றும் நீண்டகால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக விசேட அமைச்சரவைப் பத்திரம் (Cabinet Paper) ஒன்றை மிக விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்தார்.
இதில் முழுமையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 50 இலட்சம் பெறுமதியான காணி மற்றும் வீடு வழங்க உறுதி.
உட்கட்டமைப்பு: சிதைவடைந்த வீதிகள் மற்றும் பொது வசதிகளை மீளமைக்க முன்னுரிமை விசேட அமைச்சரவை பத்திரம்.
தித்வால் பாதிப்புக்குள்ளான விடுகளை
இந்திய வீட்டுத்திடத்துடன் சேர்க்க மாட்டோம்.
நீண்டகாலமாக நிலவி வரும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை.போன்ற குறித்த சந்திப்பில் பிரதமர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டன.
மலையக சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்தத் திட்டங்களை வரவேற்பதுடன், இவை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


