செ.திவாகரன்
நுவரெலியா 2026 வசந்த கால மலர் கண்காட்சி நிறைவு – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் வசந்த காலங்களில் மலர் கண்காட்சி நுவரெலியா மக்களையும் வருகை தரும் சுற்றுலா பயணிகளையும் ஊக்குவிக்கும் முகமாக நடத்தப்பட்டு வருகின்றனர் இதில். வணிகதுறை, தனியார் துறை, அரச துறைகள் என போட்டியிடுகின்றன. இவ்போட்டிகள் அனைத்தும் மூன்று கட்டங்களில் நடைபெறுகிறது குறிப்பாக வீட்டு பூந்தோட்டம், வேளியமைப்பு, தரையமைப்பு போன்ற போட்டிகளும் இதில் விசேடமாக வீட்டில் வளர்க்கும் பூக்களை வெட்டி உருவங்கள் அமைக்கும் பல்வேறு வகையான போட்டிகளை நுவரெலியா மாநகரசபையினர் நடத்தி அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு (18) மாலை பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினர் .
இப் போட்டிகளில் வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்காக பேராதெனிய தாவரவியல் பூங்காவின் அரச அதிகாரிகள் நடுவர்களாக கடமை புரிந்து சிறந்த வெற்றியாளர்களை தேர்வு செய்தனர் .
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட போது அரசத்துறை மற்றும் தனியார் துறை சார்பில் பூந் தோட்டங்களை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் நுவரெலியாவில் பிரசித்திப்பெற்ற ஹோட்டல் நிர்வாகம் சார்பில் உள்ள தோட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு பரிசுகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது .
மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் பல்வேறுபட்ட நிபந்தனைகள் , கட்டங்கள் மற்றும் பங்கேற்ற போட்டியாளர் அடிப்படையில் 32 பேர்களுக்கு முதல் பரிசும், 28 பேர்களுக்கு இரண்டாம் பரிசும், 19 பேர்களுக்கு மூன்றாம் பரிசும், 21 பேர்களுக்கு சிறப்பு சான்றிதழ்களும் பரிசில்களும் அடங்களாக மொத்தம் 100 பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் நுவரெலியா இலங்கை வங்கி (Bank of Ceylon) , நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றம், நுவரெலியா பிரதிக் காவல்துறை அதிகாரி காரியாலயம், நுவரெலியா ஹற்றன் தேசிய வங்கி (Hatton National Bank) , அரலிய ஹோட்டல் , கிராண்ட் ஹோட்டல் ஆகியவை சிறந்த உயர் சிறப்பு சான்றிதழ்களும் பரிசில்களையும், சுழற்கோப்பைகளையும் பெற்றது .
இந்நிகழ்வில் நகர முதல்வர் டபுள்யூ, எம் உபாலி வனிகசேகர மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் பிரதம விருந்திரனாகவும் சிரேஷ்ட அரச அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
