Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாணவிகள், ஆசிரியைகளை AI மூலம் ஆபாசமாகச் சித்தரித்த விவகாரம்: மூன்று மாணவர்கள் கைது; நன்னடத்தை பாடசாலையில் அனுமதி..
இலங்கை

மாணவிகள், ஆசிரியைகளை AI மூலம் ஆபாசமாகச் சித்தரித்த விவகாரம்: மூன்று மாணவர்கள் கைது; நன்னடத்தை பாடசாலையில் அனுமதி..

ThanaBy ThanaApril 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்துப் பகிர்ந்த குற்றச்சாட்டில், உடுத்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதி முடித்த ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் சாதாரண புகைப்படங்களைச் சேகரித்து, ‘AI’ தொழில்நுட்பம் மூலம் அவற்றை ஆபாசமான முறையில் மாற்றியமைத்துள்ளனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட படங்களைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வந்துள்ளனர். இது குறித்துத் தெரியவந்ததையடுத்து, பாடசாலை அதிபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு:

முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், முதற்கட்டமாக 17 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன், குறித்த மூன்று மாணவர்களையும் இன்று புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள ‘சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்’ (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகள்:

இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூன்று மாணவர்களையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள அந்த மாணவர்களைக் கைது செய்ய மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

#AI_Abuse #JaffnaNews #Maruthankeni #StudentArrest #CyberCrime #SriLankaNews #SchoolSafety #TechnologyMisuse #BreakingNews

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.