Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அஸ்வெசும பயனாளிகளுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட மேலதிக பணம் – மீளப் பெற நடவடிக்கை!
இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட மேலதிக பணம் – மீளப் பெற நடவடிக்கை!

ThanaBy ThanaMay 8, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அஸ்வெசும (Aswesuma) திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இருமுறை வழங்கப்பட்டதாகப் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விளக்கமளித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அஸ்வெசும பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதக் கொடுப்பனவுகளை வழங்குவதே சபையின் நோக்கமாக இருந்தது.

இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவு 2026.04.10 அன்று வழங்கப்பட்டது.

சாதாரண கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பின்வரும் விசேட புத்தாண்டு கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது:

மிகவும் வறிய குடும்பங்களுக்கு – 7,500 ரூபாய்.

வறிய குடும்பங்களுக்கு – 5,000 ரூபாய்.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு – 2,500 ரூபாய்.

ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைகள் தகவல் அமைப்பின் ஊடாக மாதத்திற்கு இருமுறை கொடுப்பனவுகளைச் செலுத்த இயலாது என்பதால், இந்த விசேட புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவை கணினி முறைமைக்கு வெளியகமான (Manual Slip files) முறையில் வழங்கச் சபை நடவடிக்கை எடுத்தது.

இதன்போது, சுமார் 17 இலட்சம் குடும்பங்களுக்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, 90,000 கோப்புகளைக் கொண்ட தொகுதிகளாக (SLIP files) இலங்கை வங்கிக்கு அனுப்பப்பட்டன. அங்கு ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக, ஒரு கோப்பு (Slip file) இருமுறை தரவேற்றப்பட்டது.

இதன் காரணமாக வறிய குடும்பங்கள் பிரிவைச் சேர்ந்த சிலருக்கு இரட்டைக் கொடுப்பனவு (Double Payment) வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டது. உடனடியாகச் செயற்பட்ட நலன்புரி நன்மைகள் சபை, குறித்த கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதுடன், மேலதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையை மீண்டும் சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

இருப்பினும், இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக 49,759 பயனாளிகள் தமது கணக்குகளில் இருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர். இவ்வாறு மேலதிகமாகப் பெறப்பட்ட 248,795,000 ரூபாய் தொகையை, அவர்களின் மே மாத அஸ்வெசும கொடுப்பனவில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தவறு காரணமாக அரசாங்கத்திற்கு எவ்வித நிதி இழப்போ அல்லது முறைகேடோ ஏற்படவில்லை என நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அவசரத் தேவை கருதி கணினி முறைமைக்கு வெளியகமான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொண்டமையே இதற்குப் பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள சபை, மேலதிகப் பணத்தை மீளப் பெறும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.