மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (27) பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
குறித்த விடுதியில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் அதில் வௌியான நச்சுப் புகையினால் விடுதியின் அறையில் தங்கியிருந்த இரண்டு சிறுவர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தமது தாயை பார்வையிடுவதற்காக பதுளையில் இருந்து குறித்த இரண்டு குழந்தைகளும் தந்தையுடன் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது அறையில் இரண்டு குழந்தைகளும் தாயும் தங்கியிருக்க தந்தை வௌியில் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 3 வயதுடைய ஆண் பிள்ளையும், 5 வயதுடைய பெண் பிள்ளையுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயார் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
