Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது.

June 17, 2026

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

June 17, 2026

யோஷித ராஜபக்ஷ கைது

June 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியாவில் 5 நாட்களாக காணாமல் போன தோட்டத் தொழிலாளி சடலமாக மீட்பு
Breaking

மஸ்கெலியாவில் 5 நாட்களாக காணாமல் போன தோட்டத் தொழிலாளி சடலமாக மீட்பு

ThanaBy ThanaJune 16, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள்

​கடந்த 11-ம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி, ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று (16) மதியம் 12 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த கிட்ணன் சிவபெருமான் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11-ம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போனதையடுத்து, ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவு தொழிலாளர்கள் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரைக்கு அருகில் அவரது காலணிகள் கிடந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து ஆரம்பித்து மவுசாகலை நீர்த்தேக்கம் வரையிலும் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

​சுமார் 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் பயனாக, அவர் வசித்து வந்த பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, கவரவலை தோட்ட அப்பர் குரூடன் பகுதியில் ஊடறுத்துச் செல்லும் சாமிமலை ஓயாவில் சடலம் ஒதுங்கியிருந்ததை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.

​சடலம் குறித்து பொதுமக்கள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர்.

​இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

​சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது.

    June 17, 2026

    பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026
    Editors Picks

    திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது.

    June 17, 2026

    பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026

    அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

    June 17, 2026

    திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது.

    June 17, 2026

    பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்

    June 17, 2026

    யோஷித ராஜபக்ஷ கைது

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.